search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தம்பதி கொலை"

    • கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை கோவில்பட்டிக்கு அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார்.
    • மேலும் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவரும், தூத்துக்குடி திரு.வி.க. நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவும் (20) காதலித்தனர். இவர்களின் காதலுக்கு கார்த்திகாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை கோவில்பட்டிக்கு அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துராமலிங்கம், தனது உறவினர்கள் மூலம் தம்பதியை கொலை செய்ய திட்டமிட்டார்.

    2 நாட்கள் அங்கேயே இருந்த காதல் தம்பதி நேற்று முன்தினம் மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு சென்றனர்.

    இதையறிந்து முத்துராமலிங்கம் தூண்டுதலின்பேரில், அவருடைய உறவினர்களான தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (23), தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி (27) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல், மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

    இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துராமலிங்கம், இசக்கிராஜா, ராஜபாண்டி மற்றும் ஒரு சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான முத்துராமலிங்கம் கூறியதாவது:-

    என்னுடைய மகள் கார்த்திகாவும், மாரிச்செல்வமும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் மாரிச்செல்வத்தின் குடும்பத்தினர் எனது வீட்டுக்கு பெண் கேட்டு வந்தனர்.

    அப்போது 6 மாதம் கழிக்கட்டும், பிறகு பார்த்து கொள்வோம் என்று கூறினேன். ஆனால் அதற்குள் மாரிச்செல்வம் எனது மகள் கார்த்திகாவை அழைத்து சென்று பதிவு திருமணம் செய்தார். இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. எனது அனுமதி இல்லாமலும், எனது பேச்சை மீறியும் திருமணம் செய்ததால், எனது உறவினர்கள் மூலம் அவர்களை கொலை செய்ய நினைத்தேன். அதன்படி மாரிச்செல்வத்தின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த 2 பேரையும் வெட்டி கொலை செய்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தி பின்னரே கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவன் தவிர மற்றவர்கள் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டான்.

    • 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் தம்பதி 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24).

    இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதற்கு கார்த்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 30-ந்தேதி அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் தம்பதி 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் மற்றும் கொலையில் தொடர்புடைய 2 வாலிபர்களை தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இசக்கி ராஜா, ராஜபாண்டி, இளம் சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    • மாரிச்செல்வத்தின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன் நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரிச்செல்வம்(வயது 24).

    இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா(20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அதற்கு கார்த்திகா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 30-ந்தேதி அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    நேற்று தூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ள மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் காதல் தம்பதி 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர். தகவல் அறிந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் சூப்பிரண்டு கார்த்திகேயன், ஊரக துணை சூப்பிரண்டு சுரேஷ் ஆகியோரும் அங்கு வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    மாரிச்செல்வத்தின் பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்திகாவை பெண் கேட்டு அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவரது தந்தை முத்துராமலிங்கம் பெண் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மாரிச்செல்வம் கடந்த 30-ந்தேதி கார்த்திகாவை கோவில்பட்டி அழைத்து சென்று திருமணம் செய்தார். புதுமண தம்பதி கோவில்பட்டியில் 3 நாட்கள் தங்கியிருந்த நிலையில் நேற்று காலை முத்துராமலிங்கம் வசிக்கும் அதே திரு.வி.க. நகரில் உள்ள மாரிச்செல்வம் உறவினர் வீட்டுக்கு 2 பேரும் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றதை பார்த்து முத்துராமலிங்கம் ஆத்திரம் அடைந்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது உறவினர்களின் மகன்கள் சிலரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது தூண்டுதலின்பேரில் 6 வாலிபர்கள் சேர்ந்து நேற்று இரவு முருகேசன் நகரில் உள்ள வசந்தகுமார் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மாரிச்செல்வமும், கார்த்திகாவும் தனியாக இருந்துள்ளனர். உடனே அவர்களை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்றனர்.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்ட கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் மற்றும் கொலையில் தொடர்புடைய 2 வாலிபர்களை தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டி முருகேசன் நகர், திரு.வி.க. நகர் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் 2 பேரும் மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு வந்தனர்.
    • மாரிச்செல்வம், கார்த்திகா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் தற்போது தூத்துக்குடி முருகேசன்நகர் 1-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் மாரிச்செல்வம் (வயது 24). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும், தூத்துக்குடி திரு.வி.க. நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் மகள் கார்த்திகா (20) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. கார்த்திகா பட்டப்படிப்பு படித்து உள்ளார்.

    இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதற்கு கார்த்திகா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.

    கடந்த 30-ந்தேதி மாரிச்செல்வம், கார்த்திகாவை அழைத்து கொண்டு கோவில்பட்டிக்கு சென்று விட்டாா். அங்குள்ள கிழக்கு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அதன்பின்னர் கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2 பேரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். புதுமண தம்பதி கோவில்பட்டியிலேயே தங்கி இருந்தனர்.

    திருமணமாகி 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலையில் 2 பேரும் முருகேசன்நகரில் உள்ள மாரிச்செல்வத்தின் வீட்டுக்கு வந்தனர். அவரது பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் மாரிச்செல்வம், கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

    மாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட மர்மகும்பல் வந்தது. அவர்கள் திடீரென வீட்டுக்குள் புகுந்து, அங்கு இருந்த மாரிச்செல்வம், கார்த்திகா ஆகிய 2 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது.

    கண் இமைக்கும் நேரத்தில் அரங்கேறிய இந்த கொடூரக்கொலையால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. அந்த பகுதி மக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 2 பேரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாரிச்செல்வத்தின் குடும்பத்தினரும் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து உடனடியாக சிப்காட் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    மாரிச்செல்வம், கார்த்திகா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறுகையில், 'புதுமண தம்பதியை கொலை செய்த, மர்மகும்பலை கைது செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

    இந்த இரட்டைக்கொலை குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். காதல் திருமணம் செய்ததால் கார்த்திகாவின் உறவினர்கள் யாராவது இந்த கொலையை செய்தார்களா?, அல்லது வேறு யாரேனும் மர்மநபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.
    • வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் கே.எம்.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 68). இவரது மனைவி உமாதேவி (65) இவர்கள் இருவரும் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

    இவர்களது மகன் சோழனுக்கு திருமணமாகி பெங்களூருவிலும், மகள் பத்மா திருமணம் ஆகி புதுச்சேரியிலும் வசித்து வருகின்றனர். தற்போது வளவனூரில் உள்ள வீட்டில் வயதான தம்பதி மட்டும் வசித்து வந்தனர். இதனிடையே சம்பவத்தன்று ராஜனின் மகள் பத்மா பெற்றோருக்கு போன் செய்துள்ளார்.

    நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அக்கம்பக்கத்தினரிடம் போன் செய்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் சென்று பார்த்தபோது ராஜன்-உமாதேவி ஆகியோர் தனித்தனி அறைகளில் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், பத்மாவிடமும், அருகில் உள்ள வளவனூர் போலீஸ் நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக், போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்ளிட்டவர்களும் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    ராஜன், உமாதேவி 2 பேரும் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அவர்கள் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தன்று காலை வழக்கம் போல் 2 பேரும் வெளியில் சென்று விட்டு மாலை 3 மணிக்கு வீட்டு சென்றுள்ளனர். வீட்டில் வேலை செய்த பெண்ணும் தனது பணியை முடித்து விட்டு சென்றுள்ளார்.

    அதன் பிறகு 2 பேரும் வெளியே வரவில்லை. 5 மணிக்கு பால்காரர் அவர்களை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்காததால் அவர் சென்று விட்டார். அதன்பிறகுதான் மகள் பத்மா, பெற்றோருக்கு நீண்டநேரமாக போன் செய்யவே 2 பேரின் போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்ததால் அருகிலிருந்தவர்களை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியபோதுதான் 2 பேரும் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

    வயதான 2 பேரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட நபர்தான் இந்த படுகொலையை செய்திருக்க வேண்டுமென்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் தனியொருவனாக வந்திருக்கலாம் என்றும், அவர்களை கொலை செய்து விட்டு அங்கிருந்த 4 அரை பவுன் நகை, செல்போன்களை திருடிச்சென்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ராஜன் மகள் பத்மா அளித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர். குற்றவாளியை கண்டு பிடிக்க டி.எஸ்.பி. சுரேஷ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளிலும் மற்றும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், செல்போன் சிக்னல்களை கொண்டு புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    நகைக்காக இந்த கொடூர கொலையை அரங்கேற்றிய குற்றவாளியை சுட்டு பிடிக்கும் வகையிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    • முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது.
    • குத்தகை தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 87). இவரது மனைவி ஜானகி (80). இவர்கள் அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே தனியாக வசித்து வந்தனர்.

    நேற்று மாலை அருகில் வசிக்கும் அவர்களது மகன் ஒருவர் சகாதேவனை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் வெளியே சகாதேவன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.

    ஆனால் வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். அவரை தேடிவந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைகை்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாயமான ஜானகியை உறவினர்கள் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜானகி அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு சகாதேவனையும், ஜானகியையும் கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

    முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய போது அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ஜானகியின் உடலை முட்புதரில் வீசி விட்டு சென்றதால் அவர் கொலையுண்டது உடனடியாக தெரியவில்லை.

    மொத்தம் சுமார் 20 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் கொலையாளிகள் அள்ளி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. எவ்வளவு பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை.

    தம்பதி கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அங்கு வந்த மர்ம நபர்கள் யாரேனும் வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை-கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருன்றனர்.

    மேலும் முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • லட்சுமைய்யா அவரது மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
    • நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரையும் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், கல்லேரு ஸ்டார் போர்ட் பேட்டையை சேர்ந்தவர் லட்சுமைய்யா (வயது 54). விவசாயி. இவரது மனைவி சிங்கம்மா (52). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பத்தரய்யா. லட்சுமைய்யா குடும்பத்திற்கும், பத்தரய்யா குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் பத்தரையாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. லட்சுமைய்யா குடும்பத்தினர் தனக்கு சூனியம் வைத்ததால்தான் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக பத்தரய்யா கருதினார். இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மேலும் பகை உண்டானது.

    லட்சுமைய்யா அவரது மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரையும் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதகிரி சம்பவ இடத்திற்கு வந்து கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பத்தரய்யா, அவரது நண்பர் கண்ணைய்யா இருவரும் தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    சூனியம் வைத்ததாக கருதி கணவன்-மனைவி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி பக்கமுள்ள ஆண்டிகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பசாமி (வயது41). இவரது மனைவி செல்வி (41). இவர்களுக்கு அஜித்குமார் (20) என்ற மகன் உள்ளார்.

    கணவன்-மனைவி இருவரும் தங்கள் கிராமத்தில் உள்ள இளமி கண்மாயில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மழுவேந்தி (35), அவரது உறவினர் ராஜதுரை (20) ஆகியோரும் மீன்பிடித்தனர்.

    இந்நிலையில் மீன்பிடிப்பது தொடர்பாக அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாத்தில் ஈடுபட்ட அவர்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்டனர்.

    இதையடுத்து அவர்களை அந்த பகுதியில் நின்றவர்கள் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இரவில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வீட்டு வாசலில் படுத்து தூங்கினர். அவர்களது மகன் அஜித்குமார் வீட்டுக்குள் படுத்திருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அலறும் சத்தம் கேட்டு, வீட்டினுள் படுத்து தூங்கிய அஜித்குமார் எழுந்து வந்து பார்த்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

    அஜித்குமாரை பார்த்ததும் அங்கு அரிவாளுடன் நின்று கொண்டிருந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரை ஆகிய இருவரும் தப்பி ஓடினர். அவர்கள் இருவரும் சேர்ந்து நள்ளிரவில் கருப்பசாமியின் வீடு புகுந்து அவரையும், அவரது மனைவி செல்வியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

    கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, கீழவளவு இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்தனர்.

    அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பதி கொலை குறித்து விசாரணை நடத்தினர். இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    அவர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் மற்றும் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

    மீன்பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் கணவன்-மனைவியை வெட்டிக்கொன்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளிகள் இருவரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×